ஜனவரி 27 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு? மாநகராட்சி நிர்வாகம் முடிவு!

0
ஜனவரி 27 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு? மாநகராட்சி நிர்வாகம் முடிவு!
ஜனவரி 27 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு? மாநகராட்சி நிர்வாகம் முடிவு!
ஜனவரி 27 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு? மாநகராட்சி நிர்வாகம் முடிவு!

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரில் தினசரி கொரோனா வழக்குகள் சரிவடைந்து வருவதால் வரும் ஜனவரி 27ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

பள்ளிகள் திறப்பு

இந்தியாவில் கொரோனா 3ம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்டிராவில் தற்போது தினசரி நோய்த்தொற்று பாதிப்பு குறைவை கண்டு வருகிறது. நாளொன்றுக்கு பல ஆயிரக்கணக்காக பதிவு செய்யப்பட்டு வந்த கொரோனா பாதிப்பு தற்போது சரிவை கண்டு வருகிறது. அந்த வகையில் மும்பை மாநகரத்தில் தினசரி கொரோனா வழக்குகள் வீழ்ச்சியடைந்து வருவதால் பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) கமிஷனர் இக்பால் சிங் சாஹல், ஜனவரி 27 ஆம் தேதிக்குள் நகரத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – டிஜிட்டல் மாத தொகை!

இது குறித்து அவர் கூறும் போது, ‘மும்பை மாநகரத்தில் கொரோனா தொற்று உச்ச கட்டத்தை கடந்துவிட்டது. அதனால் வரும் நாட்களில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை மேலும் குறையக்கூடும். குறிப்பாக ஜனவரி 26 ஆம் தேதிக்குள் இந்த எண்ணிக்கை 1,000 முதல் 2,000 என்ற அளவில் குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதனை கருத்தில் கொண்டு ஜனவரி 27 ஆம் தேதிக்குள் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக, மும்பையில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் ஜனவரி 31 ஆம் தேதி வரை மூடுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக் கல்வித்துறை திட்டம்!

ஆனால் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறந்திருந்தது. அதே நேரத்தில் மற்ற மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் மும்பையில் கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனா வழக்குகள் குறைய துவங்கியுள்ளன. அந்த வகையில் நேற்று (ஜன.18) ஒரு நாளில் மும்பையில் 6,149 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை ஜனவரி 15ல் 10,661 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் கொரோனா நேர்மறை விகிதம் சராசரியாக 20-22 சதவீதத்தில் இருந்து 13.7 சதவீதமாக குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!