மாநிலம் முழுவதும் பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மேலாண்மை ஆணையம் வலியுறுத்தல்!

0
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு - மேலாண்மை ஆணையம் வலியுறுத்தல்!
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு - மேலாண்மை ஆணையம் வலியுறுத்தல்!
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மேலாண்மை ஆணையம் வலியுறுத்தல்!

தெலுங்கானா மாநிலத்தில் அதிகரித்து வந்த கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. ஆனால் தெலுங்கானா அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மேலாண்மை ஆணையம் பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகளை கட்டாயம் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா நோய் தொற்றின் தாக்குதல் தெலுங்கானா மாநிலத்தில் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. இதேபோல் கொரோனா முதல் அலை மற்றும் 2ம் அலை தாக்குதலின் போதும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு – புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு! மார்ச் 1 கடைசி நாள்!

கடந்த செப்டம்பர் மாதம் முதல் தான் கொரோனா பரவல் நிலைமை கட்டுக்குள் வந்ததை அடுத்து கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. முன்னதாக தெலுங்கானா மாநிலத்தில் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 8 முதல் 16ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் பிறகு சமீபத்தில் விடுமுறையை ஜனவரி 30 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டது. தற்போதும் மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், தெலுங்கானா அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மேலாண்மை ஆணையம் (TSRMA) பிப்ரவரி 1 ம் ல் மீண்டும் நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளது.

PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.20,000 அடிப்படை சம்பளத்தில் ரூ.2 கோடி வருமானம்!

கோவிட்-19 காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையின் காரணமாக மாணவர்கள் கல்வியில் இழப்பு ஏற்படுவதாக கூறி, நேரடி வகுப்புகள் தொடங்கும் வரை ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அரசை வலியுறுத்தியுள்ளது. டிஆர்எஸ்எம்ஏ தலைவர் ஒய் சேகர் ராவ் அவர்கள் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு நடுவிலும், மல்டி பிளக்ஸ்கள், திரையரங்குகள், பார்கள், கிளப்புகள், மற்றும் பொதுக் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் மீண்டும் நடந்து செயல்பட்டு வந்தாலும் பள்ளிகள் மட்டும் அதிக மாதங்கள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!