தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!
தமிழக தனியார் பள்ளிகளில் 2022 – 2023 ம் கல்வி ஆண்டிலும் 75% கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி கட்டணம்:
தமிழகத்தில் கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் தினசரி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தது. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை செலுத்த கூறி பெற்றோர்களை வலியுறுத்தினர். ஊரடங்கினால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர்.
Amazon, Google, Infosys, Microsoft நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே இயலாத நிலையில் கல்வி கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்று பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை செலுத்த கூறி மாணவர்களை வற்புறுத்தியது. இதுகுறித்து பெற்றோர்கள் அரசிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு 75% மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் கடந்த கல்வி ஆண்டில் 75% கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதே போல 2022 – 2023 ம் கல்வியாண்டிலும் தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதாவது கொரோனாவுக்கு முந்தைய கல்வி கட்டணத்தின்படி, புதிய கல்வி ஆண்டில் கட்டணம் வசூலிக்க கூடாது. மாணவர் சேர்க்கையின் போது நன்கொடை, கட்டிட நிதி, அறக்கட்டளை நிதி என்ற மறைமுக கட்டணங்கள் ஏதும் வசூலிக்க கூடாது என்றும், அரசின் உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.