புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு பணிகள் முடிந்த பிறகு முதல்வரின் அறிவுறுத்தலின் படி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா பரவல் அபாயம் காரணமாக கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக கற்பிக்கப்பட்டது. நேரடி வகுப்புகள் நடக்காத காரணத்தால் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது. உயர் வகுப்பு மாணவர்களுக்கு உள் மதிப்பீடு முறையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 2020 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!
பொதுத்தேர்வு மாணவர்களுக்கான மதிப்பீடு முறையினையும் அரசு வடிவமைத்துள்ளது. அதன்படியே மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது. தற்போது ஜூன் 14ம் தேதி முதல் புதிய கல்வி ஆண்டு தமிழகத்தில் தொடங்கப்படுவதாக அரசு அறிவித்தது. தொடர்ந்து நோய் தொற்று அபாயம் இருப்பதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வருகிறது. பாட புத்தகங்கள் வகுப்பு வாரியாக மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், புதுச்சேரியில் ஜூலை 16ம் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு அதன் அடிப்படையில், அறிக்கை தயாரிக்கப்பட்டு முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர், முதல்வரின் அறிவுறுத்தலின் படி பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்வோம் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் திறக்கும் போது தகுந்த பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.