1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – கல்வித்துறை அமைச்சர் அனுமதி!

0
1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு - கல்வித்துறை அமைச்சர் அனுமதி!
1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு - கல்வித்துறை அமைச்சர் அனுமதி!
1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – கல்வித்துறை அமைச்சர் அனுமதி!

கேரளாவில் உள்ள பள்ளிகள் பிப்ரவரி 14ம் தேதியான இன்று 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை திறந்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்தார்.

பள்ளிகள் திறப்பு:

கேரளாவில் முன்னதாக கொரோனா தொற்று மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை வைரஸின் பரவல் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் மீண்டும் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, பிப்ரவரி 14ம் தேதியான இன்று முதல் கேரளாவில் உள்ள பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்தார். 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மதியம் வரை மட்டுமே பள்ளிகள் நடைபெறும் என்று அமைச்சர் கூறினார்.

வேலை தேடும் இளைஞர்களுக்கு குட்நியூஸ் – நிறுவனங்களுக்கான மானிய சலுகை நீட்டிப்பு!

ஞாயிற்றுக்கிழமையான நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிவன் குட்டி, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மாலை வரை வழக்கம் போல் செயல்படும். பிப்ரவரி 21 முதல் வகுப்புகள் முழு நேரமாக இருக்கும் என்றும், அனைத்து மாணவர்களும் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த உத்தரவு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று அமைச்சர் கூறினார். பொது விடுமுறை நாட்கள் தவிர அனைத்து சனிக்கிழமைகளும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் வேலை நாளாக இருக்கும் என்றார்.

1 முதல் 9 வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டுத் தேர்வு நடைபெறும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் டூ, தொழிற்கல்வி மேல்நிலை படிப்புகளுக்கான மாதிரித் தேர்வு மார்ச் 16ம் தேதி முதல் நடக்கிறது. பாடப்பகுதிகளை முடிக்க பள்ளிகள் கூடுதல் வகுப்புகள் அல்லது சிறப்பு வகுப்புகளை எடுக்கலாம் மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியர் இது குறித்து முடிவெடுக்கலாம் என்று அமைச்சர் கூறினார். 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளின் ஒவ்வொரு ஆசிரியரும் பூர்த்தி செய்யப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்த அறிக்கையை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் பிப்.19 (சனிக்கிழமை) பொது விடுமுறை – எந்தந்த பகுதிகளுக்கு தெரியுமா? முழு விபரம் இதோ!

கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்புத் திட்டங்களை வழங்க வேண்டும் என்றும், பிப்ரவரி 21ம் தேதி முதல் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தை நடத்தலாம் என்றும் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் ஆன்லைன் வகுப்புகளில் வருகை கட்டாயம் என்றும் அமைச்சர் கூறினார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!