1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாணவர்கள் உற்சாக வருகை!
கேரளா மாநிலத்தில் கொரோனா பரவலால் மூடப்பட்ட பள்ளிகள் முழுவதும் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (ஜூன் 2) முதல் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இப்போது பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகள் திறப்பு
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பேரலைத்தொற்று நிமித்தம் மூடப்பட்ட கேரளா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் முழு அளவிலான மாணவர்களின் வருகையுடன் நேற்று (ஜூன் 1) முதல் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரும் போது அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் கஜகூடத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை திறந்து வைத்து நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளை துவக்கி வைத்துள்ளார்.
TNPSC Group 1 தேர்வு குறித்த முக்கிய உத்தரவு 2022 – ஐகோர்ட் நடவடிக்கை!
அதே நேரத்தில் கேரளா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பள்ளி திறப்பு விழாக்களில் முதல்வர் பினராயி விஜயனின் அமைச்சரவை அமைச்சர்களும் பங்கேற்றனர். இப்போது கொரோனா தொற்றுநோயால் முன்வைக்கப்படும் கல்வி தொடர்பான சவால்களை அரசாங்கத்தால் கையாள முடிந்தாலும், குழந்தைகளுக்கு இது மிகவும் கடினமான காலம் என்று முதல்வர் விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், தொற்றுநோய் காரணமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இழந்த வெளிப்புற செயல்பாடுகளும் பள்ளிக்கு திரும்பும் போது அவர்களின் வளர்ச்சிக்கு முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
எவ்வாறாயினும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம் குழந்தைகள் நண்பர்களைச் சந்திப்பது மட்டுமல்லாமல், வெளி உலகத்துடன் பழகவும் முடியும் என்பதால் அவர்கள் இப்போது மகிழ்ச்சியடைவார்கள் என்று நம்புவதாக முதல்வர் பேசி இருக்கிறார். இது தவிர, கேரளா மாநிலத்தை அறிவுசார் சமுதாயமாக மாற்ற வேண்டும் என்றும் யாரும் கல்வி கற்காமல் இருக்க கூடாது என்பதற்காக கேரளாவில் உள்ள பள்ளிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.