நவம்பர் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – மாநில முதல்வர் உத்தரவு!
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் கொரோனாவால் அதிகம் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்து வகுப்புகளுக்கும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல மாநிலங்கள் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்ட மாநிலங்களில் கேரளா தற்போது முதலிடத்தில் உள்ளது. மேலும் உருமாறிய கொரோனா பாதிப்பு காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர். நிபா வைரஸ் தாக்கமும் அதிகமாக இருந்தது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. கேரள எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
வீடுதேடி வரும் PVC ஆதார் கார்டு – விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
இந்நிலையில், கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் கொரோனா பாதிப்பு இன்னும் கேரளாவை உலுக்கி கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். அவர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வுகளை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இலவசம் – முதல்வர் அறிவிப்பு!
அதன் படி நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்று முதல் 7ம் வகுப்பு வரையிலும், பின்னர் 10, 12ம் வகுப்புகளும், எஞ்சிய வகுப்புகளுக்கு 15ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து பள்ளிகளை திறக்கும் நடவடிக்கைளை கல்வித்துறை அதிகாரிகளும், சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவ வல்லுநர்கள் தொடங்கி உள்ளனர். மேலும் போதிய அளவில் அனைத்து பள்ளிகளும் மாஸ்க்குகளை கைவசம் வைத்து கொள்ள வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.