மாநிலத்தில் காலை 6 மணிமுதல் 9 வரை மட்டுமே பள்ளிகள் திறப்பு – அரசு முக்கிய உத்தரவு!
நாடு முழுவதும் பல மாநிலங்களில் கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் கடும் வெயில் காரணமாக ஒடிசா மாநிலத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல மாநிலங்களில் இந்த ஆண்டிற்கான கல்வியாண்டு காலதாமதமாக தொடங்கப்பட்டது. மேலும் பல மாநிலங்களில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதிகளும் வெளியாகி இருக்கிறது. மாணவர்கள் முழுவீச்சில் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மே 17 முதல் ஜூன் 4 வரை கோடை விடுமுறை!
இந்நிலையில் வழக்கமாக கல்வியாண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்து மே மாதத்தில் இருந்து விடுமுறை விடப்படும். ஆனால் இந்த ஆண்டு கால தாமதமாக தொடங்கப்பட்டதால் மே மாதம் வரை பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மே மாதத்தில் கோடைகாலம் தொடங்கி விட்டதால் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதனால் மாணவர்கள் வகுப்பறைகளில் இருக்க முடியாமல் சிரமத்தில் இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
அதனால் கடும் வெயில் காரணமாக ஒடிசா மாநிலத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெயில் காரணமாக பள்ளிகள் செயல்படும் நேரத்தை இன்று முதல் மாற்றியமைத்து ஒடிசா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பால் மாணவர்களும், பெற்றோர்களும் வரவேற்பை அளித்து இருக்கின்றனர். மேலும் மாணவர்களுக்கு மே இறுதி வாரத்தில் இருந்து கோடை விடுமுறை விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.