ஜூன் 18 வரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு திடீர் அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிற நிலையில் தற்போது டெல்லி அரசு அதில் மாற்றங்களை பிறப்பிக்கும் வகையில் மே 18 வரை பள்ளிகள் செயல்படும் என அறிவித்துள்ளது. அதற்கு பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கோடை விடுமுறை:
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (CBSE) பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்க உள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 24 அன்று வெளியிடப்பட்ட அட்டவணையின் அடிப்படையில் இரண்டாம் பருவத் தேர்வுகள் முடிந்த பிறகு கோடை விடுமுறை தொடங்கப்படும். இதற்கிடையில் 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு வருகிற ஜூன் 1 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மாநில அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மாறலாம்.
ஜூன் 1 முதல் 30ம் தேதி வரை கோடை விடுமுறை – மாநில கல்வித்துறை அறிவிப்பு!
கடுமையான வெப்ப அலை மற்றும் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்படும் கற்றல் இழப்பு காரணமாக முன்கூட்டியே அழைக்கப்படலாம் அல்லது தாமதமாகவும் இருக்கலாம் என்று பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அது போன்றே டெல்லி அரசும் கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு ஜூன் 18 ஆம் தேதிக்கு கோடை விடுமுறையை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
72 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தற்போது டெல்லியில் வெப்பம் அதிகரித்து கிட்டத்தட்ட 50 டிகிரி செல்சியஸை எட்டி வருகிறது. குழந்தைகள் நலத்தை கருத்தில் கொண்டு அண்டை மாநிலங்கள் கூட பள்ளி நேரத்தை மாற்றி பல மாற்றங்கள் கோடை விடுமுறையில் செய்து வருகிறது ஆனால், டில்லி அரசு இதற்கான எந்த நடவடிக்கையும் இன்று வரை எடுக்கவில்லை. மேலும் குழந்தைகள் மதியம் 12 முதல் 3 மணி அளவு வெளியே வருவது பாதுகாப்பானது அல்ல என மத்திய அரசு கூறியுள்ளதன் அடிப்படியில் பெற்றோர் சங்கமும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.