ஜூன் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மறு உத்தரவு – வலுக்கும் கோரிக்கை!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் ஒருபுறம் அச்சுறுத்தி வரும் வேளையில், மறுபுறம் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் கடுமையான வெப்பம் நிலவி வரும் இந்த சூழலில் வரும் 16ம் தேதி பள்ளிகளை திறப்பது சரியல்ல. ஜூன் 1ல் பள்ளிகளை திறக்கும் படி, மறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி வலியுறுத்தியுள்ளார்.
வலுக்கும் கோரிக்கை:
நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா, கடந்த ஜனவரி மாத இறுதியில் சற்று கட்டுக்குள் வந்ததால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 வருடங்களில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற வில்லை, இருப்பினும் நடப்பு ஆண்டு ஆண்டு இறுதி தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கோடை காலம் தொடங்கி படிப்படியாக உயரும் வெப்பநிலை, அக்னி நட்சத்திரம் துவங்கியவுடன் உச்சம் தொடுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே முந்தைய ஆண்டை விட வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – விதிமுறைகள் மாற்றம்!
இந்த ஆண்டிலும் விதிவிலக்கில்லாமல் கோடை வெயில் துவங்கிய ஏப்ரல் முதல் வாரத்திலேயே வெப்பம் உயரத் துவங்கியது. பல்வேறு மாநிலங்களிலும் வெப்பநிலை 40 – 45 டிகிரி செல்ஷியசை தொட்டுள்ளது. இந்த கடுமையான வெயில் காரணமாக, மாணவர்கள் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் 1 முதல் 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கர்நாடகாவில் பள்ளிகளுக்கு புதிய கல்வி ஆண்டு, வரும் மே 16ம் தேதி தொடங்க உள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியானது.
இருப்பினும் கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், பள்ளிகளை திறப்பது சரியல்ல. ஜூன் 1ல் பள்ளிகளை திறக்கும்படி, மாற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,நாடு முழுதும் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான வெப்பம் நிலவுகிறது. கர்நாடகாவிலும் கூட வெயிலின் தாக்கத்தால் மக்களும், கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக வட மாவட்டம், கல்யாண கர்நாடகா பகுதிகளில், வெயில் கொளுத்துகிறது.
Exams Daily Mobile App Download
இத்தகைய நிலையில், தொடக்கப் பள்ளிகளை வரும் 16ல் திறக்க, அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவால் பெற்றோர் கவலையில் உள்ளனர். இந்த உத்தரவின் பேரில்,பள்ளிகள் திறந்தாலும், குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். பள்ளிகள் திறந்தால், வட மாநிலங்களை போன்று, குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை, மனதில் கொண்டு தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளை ஜூன் 1ல் திறக்கும்படி, அரசு மாற்று உத்தரவை பிறப்பிக்க வேண்டும். விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டால் குறையும் கல்வி நாட்களை, புதிய கல்வி ஆண்டில் வரும் சனிக்கிழமை நாட்களில் கூடுதல் வகுப்புகளை எடுத்து சரி செய்யலாம் என்று கூறியுள்ளார்.