1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு!
புதுச்சேரியில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 2022 – 2023 ம் கல்வியாண்டில் புதிதாக 70 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்படைய கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களின் கற்றலில் பின்னடைவு ஏற்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருதினர். அதனால் மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த கோரிக்கைகள் எழுந்தது. அதன்படி கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்ததை அடுத்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது பொதுத்தேர்வுகளும் நடைபெறத் தொடங்கியது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் சம்பள உயர்வு? அகவிலைப்படி (DA) 4% அதிகரிப்பு!
தற்போது 1- 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் மேல்நிலை வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவடைய உள்ளது. விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுவையில் 1 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுவை கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 11ம் வகுப்பு சேர்க்கை நடைபெறும்.
Exams Daily Mobile App Download
மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் பாட புத்தகங்கள், சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். புதிதாக 70 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அதே போல பள்ளி திறக்கும் முன்பே ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்தும் CBSE திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பாக நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமை பள்ளிகள் இயங்காது. பள்ளிகள் திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு பேருந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.