8, 11 ஆம் வகுப்புகளுக்கு அக்.21 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதை அடுத்து அக்டோபர் 21 முதல் 8 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்றின் 2ம் அலை நாடு முழுவதும் குறைந்து உள்ளது. இதனால் பல மாநில அரசுகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் நேரடி வகுப்புக்களை தொடங்குவது குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பல மாநிலங்களிலும் கல்லூரிகள் மற்றும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டது. ஆரம்ப நிலை மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒடிசா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அறிக்கையின் படி, 521 பேருக்கு புதிதாக தொற்று பாதித்துள்ளதாகவும், இது முந்தைய நாளை விட 94 குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை – பெறுவது எப்படி?
இதனால் இதுவரை மாநிலத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,33,809 ஆக உள்ளது. ஆறு பேர் புதிதாக உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையை 8,274 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளதால் பள்ளிகளை மீண்டும் திறக்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது. முன்னதாக 9 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ஏற்கனவே சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடித்து தொடங்கப்பட்டுள்ளது.
TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு – கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு!
தற்போது, பள்ளி மற்றும் வெகுஜன கல்வி அமைச்சர் எஸ் ஆர் டாஷ் அக்டோபர் 21 முதல் 8 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புக்களை தொடங்க அனுமதி அளித்துள்ளார். 1 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. நவராத்திரி பூஜை விடுமுறைகள் முடிந்த பின்னர் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.