1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!

0
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!

கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து நேற்று முன் தினம் பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வி ஆண்டு தொடங்கி உள்ளது. புதிய கல்வி ஆண்டின் முதல் நாளில் மாணவர்களை ஆசிரியர்கள் ரோஜா மலர்கள் கொண்டும், மாநில கீதம் பாடியும் வரவேற்றனர்.

வருகை பதிவு:

கொரோனா ஒன்று, இரண்டாவது மற்றும் 3ஆவது அலைகளுக்கு பின்னர் நாடு முழுவதும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படாமல் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. இருப்பினும் நடப்பு ஆண்டு கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால் ஆண்டு இறுதித் தேர்வுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.

PF கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க இதை செய்யவும்!

ஒரு சில மாநிலங்களில் கோடை வெயில் காரணமாக முன்கூட்டியே பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் மாணவர்களுக்கு 35 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது விடுமுறை முடிந்து மே 16, 2022 (திங்கட்கிழமை) அன்று மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பி உள்ளனர். 2 வருடங்களுக்கு பிறகு, கர்நாடக பள்ளிகள் இப்போது இயல்பான கற்பித்தல் மற்றும் கற்றலைத் தொடங்கி உள்ளன. கடந்த திங்கட்கிழமை அன்று பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.

Exams Daily Mobile App Download

பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய கர்நாடக மாநில கல்வித்துறை கமிஷனர் விஷால் ஆர் பல பள்ளிகளில் சுமார் 50-70 சதவீத வருகைப் பதிவு மட்டுமே இருந்தது. வரும் நாட்களில் வருகை படிப்படியாக அதிகரிக்கும் என நம்புகிறேன் என கூறினார். மேலும் கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட உதவி பெறாத தனியார் பள்ளிகள் மேலாண்மை சங்கம் சேகரித்த தரவுகளின் படி, தனியார் பள்ளிகள் முதல் நாளில் சராசரியாக 65 சதவீத வருகையைப் பதிவு செய்துள்ளன. இது குறித்து தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள ஜாலிகே அரசு உயர்நிலைப் பள்ளியின் மூத்த ஆசிரியர் கிரீஷ் கே.எஸ் கூறியது, 120 மாணவர்களில் 45 மாணவர்கள் மட்டுமே முதல் நாளில் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர். பல மாணவர்கள் இன்னும் விடுமுறையில் தான் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!