தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? செப்.14ல் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆலோசனை!
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி பள்ளிக்கல்வி இயக்குநர் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு
கொரோனா 2 ஆம் அலை பரவலுக்கு மத்தியில் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் கடந்த 1 ஆம் தேதி முதல் மீண்டுமாக திறக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கும் பள்ளிகளை துவங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் பள்ளி மாணவர்களுக்கு இடையே அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் பள்ளிகளை திறப்பதற்கு எதிர்மறையான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதும் மத & பொது கூட்டங்களுக்கு தடை – கொரோனா 3ம் அலை எதிரொலி!
இது குறித்து, தமிழக தலைமை செயலர் இறையன்பு முக்கிய அதிகாரிகளுடன் நேற்று (செப்டம்பர் 9) ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இதை தொடர்ந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் வரும் 14 ஆம் தேதி நடத்தப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநர் நந்தகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அனுப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் பல்வேறு இயக்குனரக பணிகள் குறித்து பட்டியலிட்டு அந்த விவரங்களுடன் முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டாம் என கூறவில்லை – முதல்வர் விளக்கம்!
மேலும் தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயம், அங்கீகாரம் நீட்டிப்பு, முதல்வரின் தனிப்பிரிவு மனுக்களுக்கான தீர்வு, பிரதமர் அலுவலத்தில் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு, பாலியல் பிரச்சனைக்கான தீர்வுக்குழு ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் பள்ளிக் கல்வியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள நடுநிலைப் பள்ளிகளை திறப்பது தொடர்பான முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.