இந்தியாவில் படிப்படியாக திறக்கப்படும் பள்ளிகள் – WHO தலைமை விஞ்ஞானி வழங்கிய நெறிமுறைகள்!
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளதால் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் WHO தலைமை விஞ்ஞானி அவர்கள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தொற்று பரவலின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதனால் பல்வேறு குழுக்களை அமைத்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். அது மட்டுமில்லாமல் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் கூட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும் கிட்டத்தட்ட பள்ளிகள் திறக்கும் தேதிகளை கூட ஒரு சில மாநில அரசுகள் அறிவித்து விட்டன. சில மாநிலங்களில் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சன் டிவி “ரோஜா” சீரியலில் வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள் – வெளியான ப்ரோமோ!!
தற்போது பள்ளிகள் திறப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும்,சில கருத்துக்களையும் உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் அவர்கள் அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலின் மூன்றாம் அலை தாக்கம் குறித்த அச்சம் இருப்பதால் மிகவும் விழிப்புடனும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக குழந்தைகளை கொரோனா தாக்கும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளதால் கூடுதல் கவனம் தேவை எனவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் 10 வயதிலேயே புகையிலையை கையில் எடுக்கும் சிறுவர்கள் – சர்வே முடிவுகள்!
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என்று உறுதியாக தமது அறிக்கையில் தெரிவித்து உள்ளார். குழந்தைகளுக்கும் விரைவில் தடுப்பூசி போடப்படும் என்பதால் இதனை செலுத்தி கொள்ள தயாராக இருக்குமாறு தெரியப்படுத்தியுள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களும் விரைவில் செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.