தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? வலுக்கும் கோரிக்கைகள்!
தமிழகத்தில் அரியலூரில் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் பள்ளிகளை மூட அரசுக்கு நிர்பந்தம் ஏற்படுமோ என்ற சூழல் தான் இப்போது நிலவுகிறது.
மாணவர்களுக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12 வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு அறிவித்தபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
செப்.13ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!
வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களை மன ரீதியாக கற்றலுக்கு தயாராக தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் அரியலூரில் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு நாட்களில் பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து கடலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ இல் பங்கேற்கும் பிரபலம் – வெளியான தகவல்!
இந்த செய்தி அறிந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் அப்பள்ளியில் பயிலும் அனைவருக்கும் தொற்று பரவும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால் மீண்டும் பள்ளிகளை மூட அரசுக்கு நிர்பந்தம் ஏற்படுமோ என்ற சூழல்தான் இப்போது நிலவுகிறது. ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்படுவதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருப்பதால் அடுத்த விசாரணையில் மாணவிகளின் கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.