தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
கொரோனாவின் தாக்கம் சீனாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில், கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் மீண்டும் மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
முழு ஊரடங்கு
நமது நாட்டின் அண்டை நாடான சீனாவில் உள்ள முக்கிய நகரான வூகான் பகுதியில், சென்ற 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று மிகவும் மோசமான நிலையில் பரவியது. மேலும் இந்த தொற்று சீனாவில் மட்டுமல்லாமல் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் குறைந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் ஒரு ரேஷன் கார்டுக்கு 1200 ரூபாய் – வெளியான ஷாக் தகவல்!
இந்நிலையில், 4வது அலை கொரோனா வைரஸ் சீனாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. ஆனால் ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் அடுத்து வரும் ஒரு சில நாளிலும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாகி வருகிறது. டெல்லியிலும் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. 4வது கொரோனா வைரஸ் காரணமாக இன்று முதல் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கண்டிப்பான முறையில் தனிமனித இடைவெளி விட்டு மற்றும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.
ExamsDaily Mobile App Download
நேற்று தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே குழி மாத்தூர் கிராமத்தில் கோண கொடுங்கலூரில் தூர்வாரும் பணியை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடங்கி வைத்த அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது கொரோனா 4வது அலை காரணமாக பள்ளிகள் செயல்படுவது குறித்து முடிவுகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முடிவு எடுப்பார் என்றும், மருத்துவ வல்லுநர்கள் குழு அளிக்கும் கருத்தின் அடிப்படையில் மட்டுமே பள்ளி கல்வித்துறை மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் முடிவு எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியிருக்கிறார்.