தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன!

0
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன!

தமிழகத்தில் அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் இல்லாத மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்க இருப்பதாக தமிழக அரசின் கோட்டை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை விடுமுறை:

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டு இருந்தது. மேலும் இதனால் மாணவர்கள் நேரடி வகுப்புகளில் இருக்கும் சுவாரஸ்யங்களை பெறாமல் இருந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் செய்லபட தொடங்கியது. அதன் தொடர்ந்து நேரடி தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து அதற்கான தேதியையும் அறிவித்தது.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை, தேர்வின்றி தேர்ச்சி – வலுக்கும் கோரிக்கை!

இந்த நிலையில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளனர். அதனால் மாணவர்களும் மும்முரமாக படித்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23 ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் மாநிலத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைத்து வருகிறது. அதனால் பொதுத்தேர்வுகள் நடைபெறும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் செய்து கோடை விடுமுறையை விரைவில் அறிவிக்குமாறு தமிழக அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். அதனால் தற்போது தமிழக அரசும் மாணவர்களும் நலனை கருத்தில் கொண்டு முன்னரே கோடை விடுமுறையை அறிவிக்க இருப்பதாக தெரிவித்து உள்ளனர். மேலும் அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!