தமிழகத்தில் மீண்டும் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து கொண்டே வருவதால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அதனால் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்களின் கல்வி நலன் கருதி 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
நாளை (பிப்.5) பொது விடுமுறை அறிவிப்பு – அரசின் உத்தரவு வெளியீடு!
அதன்படி கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மேலும் இவர் இது குறித்து சமூக வலைதளமான ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் கூறியதாவது, தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதியிலிருந்து 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
ரெய்னாவை ஒதுக்கும் தோனி? பல ஆண்டுகால நட்பில் உருவான விரிசல்! ஷாக்கிங் தகவல்!
ஆனால் தமிழகத்தில் இன்னும் கொரோனா பரவல் குறையாத சூழலில் பள்ளிகள் திறப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து சில மாநிலங்களில் உயர்நிலை வகுப்புகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்திலும் பொது தேர்வு எழுதும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும், அத்துடன் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.