தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் மீண்டும் பள்ளிகள் மூடல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் பாடங்களை ஆன்லைன் முறையில் கற்று வந்தனர். இதையடுத்து கடந்த நவம்பர் மாதத்தில் கொரோனா கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மீண்டும் பள்ளி கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
மீண்டும் இரவு ஊரடங்கு அமல், காவல்துறை தீவிர கண்காணிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
இதையடுத்து தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொது தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி பொது தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – சூப்பரான அறிவிப்பு!
இந்த கோரிக்கையில், தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறந்தது மிகவும் வரவேற்புக்குரியது. ஆனால் இந்த கல்வியாண்டு இன்னும் இரண்டு மாதங்களில் முடியவுள்ளது. அத்துடன் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கோடை விடுமுறை அளிக்கப்படும். இதையடுத்து 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது மிகவும் சந்தேகம். அதனால் கொரோனா பரவல் குறைந்தாலும் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தலாம். மேலும் கொரோனா கால கட்டம் முடிந்த பிறகு அடுத்த கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என்றும் கூறியுள்ளனர்.