கர்நாடகாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் பிரச்சனை – மாணவிகள் அணிந்து வர தடை!

0
கர்நாடகாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் பிரச்சனை - மாணவிகள் அணிந்து வர தடை!
கர்நாடகாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் பிரச்சனை - மாணவிகள் அணிந்து வர தடை!
கர்நாடகாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் பிரச்சனை – மாணவிகள் அணிந்து வர தடை!

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவிகள் வகுப்புகளின் போது ஹிஜாப் அணியக் கூடாது என்று எழுந்து வந்த சர்ச்சைக்கு மத்தியில் மூடப்பட்ட பள்ளிகள் இன்று (பிப்.14) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. எனினும் மாணவிகள் தற்போது ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்கப்படவில்லை.

ஹிஜாப் சர்ச்சை

சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் இது சர்ச்சையாக மாறி பின்னர் கலவரமாக வெடித்தது. இதனால் கடந்த பிப்ரவரி 9ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, இன்று (பிப்.14) முதல் 1 லிருந்து 10 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. என்றாலும் பள்ளி மாணவிகள் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு ஹிஜாப்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

அதாவது, இடைக்கால உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் போது மத உடைகள் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாண்டியா மாவட்டத்தில் அரசு நடத்தும் பள்ளியின் வாயில்களில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் அதை அகற்றும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்திய வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குள் நுழைய விடாமல் தடுத்ததால் வாக்குவாதம் செய்வதும் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு – கசிந்த வினாத்தாள்! தீவிர விசாரணை!

இருப்பினும் ஒரு பெரிய விவாதத்திற்கு பிறகு, பெண்கள் ஹிஜாபை கழற்றி முகக்கவசங்களை அணிந்து, கொரோனா நெறிமுறைகளுக்கு ஏற்ப பள்ளிக்குள் நுழைந்தனர். அதே போல மாண்டியாவில் உள்ள ரோட்டரி பள்ளிக்கு வெளியே மாணவிகள் வளாகத்திற்குள் நுழையும் முன் ஹிஜாபை கழற்ற சொன்னதால் பெற்றோர் மற்றும் ஆசிரியர் ஆகியோரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஷிவமொக்கா பகுதியிலும் 13 மாணவிகள் ஹிஜாப்களை கழற்ற மறுத்ததால் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இப்போது கர்நாடகாவில் ஏற்பட்ட ஹிஜாப் விவகாரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான வாதங்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (பிப்.14) நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!