தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? பெற்றோர்கள் கோரிக்கை!
கொரோனா ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. தற்போது 1முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்ககோரி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி விடுமுறை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து வந்தது. கொரோனா முன்றாம் அலையையும் கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான விதிகளை விதித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு என பல ஊரடங்கு விதிகளை தமிழக அரசு விதித்தது. இதுமட்டுமல்லாமல் உணவகங்களில் மக்கள் அமர்ந்து உணவு உண்ணக்கூடாது. கோவில்களில் பொது மக்களுக்கு தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியதால் தான் கொரோனா கட்டுக்குள் வர துவங்கியது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு இயக்குநர் முக்கிய உத்தரவு!
கொரோனா காலகட்டத்தில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலமாகவே பாடம் கற்பித்து வந்தனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகவே மாணவர்கள் பள்ளியின் பக்கமே எட்டி பார்க்கவே இல்லை என்று கூட சொல்லலாம். தற்போது கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைந்ததும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு விட்டன. இந்த மாணவர்களுக்கான இறுதி ஆண்டு தேர்வும் நெருங்கி கொண்டிருக்கிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் உலக நாடுகள் – நீடிக்கும் பதற்றம்!
இந்த சமயத்தில் தங்களது குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடம் கற்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர் மற்றும் அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து விரைவில் ஆலோசிக்கப்படவுள்ளதாக கல்வி துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.