தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூடல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!
தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனா பரவலில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால், மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பள்ளிகள் மூடல்:
தமிழக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இந்த வைரஸ் தொற்று அச்சத்தால் மாணவர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி நிலையில் சற்று பின் தங்கியது. என்ன தான் ஆன்லைன் வாயிலாக கற்றல் கற்பித்தல் நிகழ்ந்து வந்ததாலும் இவை எந்த அளவிற்கு கற்றல் அடைவை ஏற்படுத்தும் என்பது சந்தேமாகவே இருந்து வந்தது.
TNPSC தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நேரடி வகுப்பறை கற்றல் முறையே சிறந்தது என்று கல்வியாளர்களும், ஆசிரியர்களும் கருதினர். அதனால் விரைந்து பள்ளிகளை திறக்கவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் அடிப்படையில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்ததை அடுத்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தான் முழுமையாக பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுத்தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டு வகுப்பு மற்றும் பாடவாரியான கால அட்டவணை வெளியிடப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நேரத்தில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நான்காம் அலை தாக்கும் என்று எச்சரிக்கை எழுந்துள்ள நிலையில் 1 -9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை மூடுவது குறித்து பள்ளிக் கல்வித் துறை பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.