தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?
தமிழகத்தில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று பரவல் சற்று அதிகரித்து காணப்படும் நிலையில் பள்ளிகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மறுபுறம் கல்வி நிறுவனங்களில் நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
பள்ளிகள் மூடல்?
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு பள்ளிகள் கோடை விடுமுறைக்கு மூடப்பட்டன. பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் வழக்கம் போல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதுமட்டுமின்றி தொடக்க பள்ளி மாணவர்களும் நீண்ட நேரம் முகக்கவசம் அணிந்தபடி இருப்பது சிரமத்தை அளிக்கும். இதற்கிடையில் மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொடக்க பள்ளி மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு சில பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர். மறுபுறம் கொரோனா ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Exams Daily Mobile App Download
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் மேற்கொண்டு கொரோனா தீவிரமாக பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு தொடர்ந்து கொரோனா தொற்று தினசரி அதிகரித்துக் கொண்டே சென்றால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தொடக்க பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.