தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல் – பெற்றோர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அடுத்த கல்வியாண்டு முதல் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்று கூறுகின்றனர்.
பள்ளிகள் மூடல்:
தமிழகத்தில் அடுத்தடுத்து பரவி வரும் கொரோனா பெருந்தொற்றால் பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இரண்டாம் அலைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மீண்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்றது. மேலும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருந்த திருப்புதல் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது.
பிப்.14 மாநிலம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிப்பு – தேர்தல் வாக்குப்பதிவு எதிரொலி!
இந்த நிலையில் அரசின் முயற்சியால் கொரோனா பரவல் குறைய தொடங்கியதும் அரசு இரவு நேர மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கை ரத்து செய்தது. இதனையடுத்து கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் 1- 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பிப்ரவரி 15 காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – அலுவலகங்கள் 100% திறனுடன் திறப்பு!
இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், கொரோனா தாக்கம் குறைந்து வந்தாலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும். மீண்டும் ஆன்லைன் வாயிலாகவே பாடங்களை நடத்த வேண்டும். பொதுத்தேர்வு எழுத உள்ள 10 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும். அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்று கூறுகின்றனர். இதற்கு முன்பு பலரும் தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.