நாட்டின் நெருக்கடி நிலையால் மூடப்படும் பள்ளிகள் – அவசர கால நடவடிக்கை!
இலங்கையில் இதுவரை காணாத அளவிற்கு கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போதைய அரசு அவசர கால நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
பொருளாதார நெருக்கடி:
உலகம் முழுவதும் கொரோனா கால ஊரடங்கு நடவடிக்கைகளால் கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வந்தது. ஆனால் அதன் பிறகு கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் மெல்ல நெருக்கடி நிலையானது மாறி மீண்டும் இயல்பு நிலை திரும்ப தொடங்கியது. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட தொடங்கியது. ஆனால் முழுக்க முழுக்க சுற்றுலா துறையை மட்டுமே நம்பி முழுவதுமாக இயங்கி வந்த இலங்கை அரசானது மீண்டு வர வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் சீனாவுடன் இருந்து நிதி உதவியை இலங்கை பெற்றது.
Exams Daily Mobile App Download
இந்த நிதி உதவியை மையமாக வைத்து உடன்படிக்கைகளும் கையெழுத்தானது. ஆனால் இலங்கையின் நெருக்கடியினால் சீனாவிடம் வாங்கிய கடன் தொகையின் வட்டியை கூட இலங்கை அரசால் செலுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், நாடு முழுவதும் கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியமான உணவு பொருட்கள் முதல் எரிபொருள் வரை அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பேப்பர்கள் இல்லாத காரணத்தால் முன்னதாக பள்ளிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்படும் நிலை வந்தது.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!
அதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள “தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து வசதிகளில் உள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு” அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பவர்களைத் தவிர பிற நபர்கள் வெள்ளிக்கிழமை பணிக்கு வர வேண்டாம் என்று பொது நிர்வாக அமைச்சகம் பொது அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளும் மூடப்பட்டன.