தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல்? பெற்றோர்கள் எதிர்பார்ப்பு! ஒமிக்ரான் எதிரொலி!
உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் 3வது அலைக்கான தாக்கத்தை உருவாக்கும் என கருத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக பள்ளி மாணவர்களுக்கு மீண்டுமாக ஆன்லைன் வகுப்புகளை தொடர வேண்டும் என பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
ஒமிக்ரான் வைரஸ்
கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் உலகளவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் பல்வேறு உலக நாடுகளும் முழு முடக்கம் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் இந்த நோய் தொற்று பரவல் காரணமாக ஆப்பிரிக்கா, ஜிம்பாவே, நெதர்லாந்து, கனடா உள்ளிட்ட சில நாடுகள் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. மேலும் பல்வேறு நாடுகளில் இதுவரை அனுமதிக்கப்பட்டிருந்த சில தளர்வுகள் அரசாங்கத்தால் திரும்ப பெறப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் உயர்வு? அமைச்சர் விளக்கம்!
இதற்கிடையில் சவூதி அரேபியா, நைஜீரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், பிரேசில், நெதர்லாந்து, ஜெர்மனி, ஹாங்காங், கனடா, போர்ச்சுகல், போல்ஸ்வானா, ஸ்பெயின், சீனா உள்ளிட்ட 24 நாடுகளில் இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் 3வது அலையை உருவாக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்திலும் கூட இந்த நோய் தொற்று குறித்த அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் பொது மக்கள் முகக்கவசங்களை அணிவது, தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது என அனைத்து விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்க தமிழகத்தில் தற்போது தான் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பெற்றோர்களிடையே இந்த ஒமிக்ரான் வைரஸ் புதிய அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.
தமிழகத்தில் பெற்றோரை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி – கல்வித்துறை உத்தரவு!
ஏற்கனவே இந்தியாவில் தற்போது நிலவி வரும் கொரோனா 2ம் அலை தொற்றால் பள்ளி மாணவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஒமிக்ரான் வைரஸும் 18 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை தாக்கும் என அறிக்கப்பட்டுள்ளது பெற்றோர்கள் இடையே கேள்வியை உண்டாக்கி இருக்கிறது. அதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கான நேரடி வகுப்பை ரத்து செய்து விட்டு, மீண்டுமாக ஆன்லைன் வகுப்புகளை தொடர வேண்டும் என பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.