தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறையாத நிலையில் பள்ளிகளை திறந்தது ஏன்? அரசு இந்த முடிவை பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது வருகிறது. தேர்தலுக்காக ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது பள்ளி மாணவர்கள் தான். தொடர்ந்து விதிக்கப்படும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியாக உள்ளது. நேரடி வகுப்புகள் நடைபெற்றால் மட்டுமே மாணவர்கள் முழுமையாக கற்றலில் ஈடுபட முடியும். ஆன்லைன் கல்வி அந்த அளவுக்கு பாடங்களை தெளிவு படுத்தாது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர் . அதனால் பள்ளிகளை திறப்பது கட்டாயமான ஒன்றாக உள்ளது. இதனையடுத்து நேற்று முதல் மீண்டும் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்வு – பட்ஜெட் தாக்கலில் அறிவிப்பு!

கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் முழுமையாக குறையாத நிலையில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்துள்ளது. அதாவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளது. அதன் பிறகே பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காகவே இந்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது என்று முக்குலத்து புலிகள் கட்சி நிறுவன தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைக்கு 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிலும் 2 டோஸ் முழுமையாக செலுத்தப்படவில்லை.

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி முறையில் தேர்வுகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!

1 டோஸ் மட்டுமே மாணவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூடியிருந்த பள்ளிகளை 1ம் வகுப்பு முதல் திறக்கப்படுவதான காரணத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாத வண்ணம் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!