தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? கொரோனா பரவல் எதிரொலி!

0
தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? கொரோனா பரவல் எதிரொலி!

தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா பரவல் பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பள்ளிகள் மூடல்

கடந்த 2 ஆண்டுகளாக நிலவிக் கொண்டிருக்கும் கொரோனா பரவல் பாதிப்புகளுக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் முழுமையாக திறக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 2021-22ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளும், ஆப்லைன் தேர்வுகளும் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டு கடந்த ஜூன் 13ம் தேதியன்று புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டுமாக திறக்கப்பட்டது. இப்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக வருகை தந்து கொண்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக கொரோனா 4ம் அலைபாதிப்புகள் வேகமெடுக்க துவங்கி இருக்கிறது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்படும் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் சிலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவார்களோ என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதாவது, தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் முறையான தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என பெற்றோர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து பெற்றோர்கள் தரப்பில் இருந்து வந்த கருத்துக்களின் படி, பள்ளிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சில மாணவர்கள் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மற்ற மாணவர்களும் பாதிக்கப்படக்கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், இப்போதுள்ள சூழலில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் அவசியமா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாக விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிகளை மூடுவதற்கும், முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கும் அவசியம் ஏற்படவில்லை என்று கூறி இருந்தார்.

நகை அடமான கடையில் சந்தித்த கதிர், ஜீவா, மீனா அப்பாவிடம் பணம் கொடுக்க செல்லும் தனம் – இன்றைய எபிசோட்!

அதே நேரத்தில் நேற்று (ஜூலை 1) முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நோய்பரவல் குறைவாக இருப்பதாகவும், பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!