தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை – காரணம் இதுதான்! விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான காரணத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பள்ளி விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் திறக்கப்பட்டது. அதன்படி நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஏராளமான நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் கடந்த டிசம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ஓமைக்ரான் தமிழகத்தில் வேகமாக பரவியது.
TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதனால் தமிழகத்தில் 3ம் பரவலின் தாக்கம் வேகமெடுக்க தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. அதனால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வி நலன் கருதி 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என்று அரசு அனுமதி அளித்தது.
2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் – அரசு வெளியீடு!
அதன்படி தற்போது கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் தேர்தல் பணிகளை முன்னிட்டு அரசுப் பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். அத்துடன் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என்பதாலும் பள்ளிகளுக்கு பிப்ரவரி 18 முதல் 22 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.