தொற்று பரவல் மத்தியில் இயங்கும் பள்ளிகள் – திட்டமிட்டபடி தொடங்கிய காலாண்டு தேர்வு!
காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் குழந்தைகளின் நலன் கருதி புதுவையில் பள்ளிகளுக்கு ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறைக்கு பிறகு இன்று வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட்டு காலாண்டு தேர்வு தொடங்கப்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வு:
தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சல் கடந்த ஒரு மாத காலமாகவே தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இந்த காய்ச்சல் பாதிப்புகள் தொடர்வதாகவும் கூறுகின்றனர். மேலும் தீராத காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல் வலி, இருமல் போன்றவைகள் இன்புளுயன்சாவின் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் – மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
இந்த காய்ச்சல் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பரவ தொடங்கியது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு காய்ச்சல் எளிதாக பரவுவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் காலாண்டு தேர்வு நடத்தப்படுவதில் சிக்கல் எழுமா? என்று கேள்வி எழுந்த நிலையில் இன்று புதுவையில் வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டு காலாண்டு தேர்வு தொடங்கியது. தற்போது 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு காலையும், 6, 7,8ம் வகுப்புகளுக்கு மாலையும் தேர்வு நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
முதல் நாளான இன்று மொழிப்பாடத் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் அதாவது வரும் 30-ம் தேதி வரை ஆங்கிலம், கணிதம் அறிவியல், சமூக அறிவியல் பாட தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இந்த தேர்வு முடிந்த பிறகு ஒரு வாரத்துக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும் என்று புதுச்சேரி கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அக்டோபர் 6-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 2ம் பருவத்திற்கான வகுப்புகள் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்