தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் 1 லிருந்து 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட இருக்கும் நிலையில் இந்த முடிவை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது.
பள்ளிகள் திறப்பு
கடந்த ஒரு சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொரோனா 3ம் அலைத்தொற்றின் தினசரி பாதிப்புகள் வீழ்ச்சியடைய துவங்கி இருக்கிறது. அந்த வகையில் இதுவரை 31 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டு வந்த கொரோனா பாதிப்புகள் தற்போது 29 ஆயிரமாக குறைந்துள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் இம்மாத இறுதியில் இருந்து கொரோனா பரவல் தொற்று வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலைமையை கவனத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளில் இருந்து அரசு தளர்வுகளை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
TNPSC குரூப் 2 & குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் – தேர்வர்கள் கவனத்திற்கு!
அந்த வகையில் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களையும் மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி, இப்போது பிப்ரவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மீண்டுமாக திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் 1 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கும் நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது.
ஏனென்றால், தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக 15 முதல் 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே 1 முதல் 12 வரையுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டால், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தவிர தமிழகத்தில் தற்போது நாளொன்றுக்கு 29 ஆயிரமாக புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருவதால், பள்ளிகள் திறக்கப்படும் போது அது மாணவர்கள் மத்தியில் எதிரொலிக்குமோ என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
பிப்.1 முதல் 10 – 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முக்கிய அறிவிப்பு!
இதனால் தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கையை அரசு ஒத்தி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் இருந்து அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகிறது. ஆனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை கருத்தில் கொண்டும் எடுக்கப்பட்ட பள்ளிகளை திறக்கும் முடிவு அரசால் மறுபரிசீலனை செய்யப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.