1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறப்பு!

0
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறப்பு!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறப்பு!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறப்பு!

மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றி ஜூன் 15ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

பள்ளி திறப்பு:

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர இயங்கப்படவில்லை. இதையடுத்து தற்போது இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாட்டில் கொரோனா பரவலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டு வருகிறது. மேலும் நாட்டில் 4ம் அலையின் தாக்கம் ஜூன் மாதத்தில் பரவத் தொடங்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது.

இந்திய நிறுவனங்களில் முடிவுக்கு வரும் WFH? ஹைபிரிட் முறைக்கு 70% பேர் தயார்! ஆய்வு அறிக்கை தகவல்!

மேலும் மகாராஷ்ட்டிரா மாநிலத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அத்துடன் மாநிலத்தில் தொடர்ந்து 5வது நாளாக ஒரு நாள் பாதிப்பு 1000 ஐ தாண்டி பதிவாகி வருகிறது. இந்த நிலையில் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என்றும் மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் பொதுமக்களை முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவைகளை பின்பற்றுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 1, 2ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. அதனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்களிடையே கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக வரும் கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற ஜூன் 25ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி திறக்கப்பட உள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!