5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.,27 பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் 5 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 27 முதல் மீண்டும் திறக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் அரசு சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகள் 2021 ஜனவரி 27 முதல் 5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் திறக்கப்பட உள்ளன என்று அம்மாநில கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பை கல்வி அமைச்சர் தனது சமூக வலைதள பக்கங்களின் மூலம் வெளியிட்டு உள்ளார். மகாராஷ்டிராவில் 5 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முதல்வர் உத்தவ் தாக்கரே தனது ஒப்புதலை அளித்துள்ளார் என்று வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் – 91 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!!
நாட்டில் கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவுவதைக் கருத்தில் கொண்டு மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகள் 2020 மார்ச் முதல் மூடப்பட்டுள்ளன. தொற்றுநோய்களின் போது இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா உள்ளது. எனவே பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த முடிவுகள் பலமுறை ஒத்திவைக்கபட்டது. மகாராஷ்டிராவின் புனே, நாக்பூர் மற்றும் நாசிக் போன்ற சில நகரங்களில் உள்ள பள்ளிகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்கள் – நேர்காணல் தேர்வு!!
5 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே ஒப்புதல் அளித்த புதிய உத்தரவில், மாநில அரசு வெளியிட்டுள்ள கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்