தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – ஜன.25 இல் முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் ஜனவரி 19ம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஜனவரி 25ம் தேதி பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. பின்னர் நோய்தொற்று குறைந்த காரணத்தால் கல்வி நிறுவனங்களை திறந்து கொள்ள மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர் ஜனவரி 19ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 13 ஆயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கியது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி – முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை!!
தற்போது 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் ஜனவரி 25ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதன்மைச் செயலர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் எனவும், அவரின் ஒப்புதலை பெற்ற பிறகு 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என பள்ளிக்கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Please cancel 11th public exam. Please🙏🙏🙏