செப்.20ம் தேதி 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு, இரவு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில் செப்டம்பர் 20ம் தேதி (நாளை) 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் தொடக்க பள்ளிகள் திறக்கப்படும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களின் படி, 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வழக்கமான வகுப்புகள் செப்டம்பர் 20 முதல் 50 சதவீத திறன் கொண்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மீண்டும் தொடங்கும். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளின் செயல்பாடு செப்டம்பர் 27 முதல் 50 சதவீத திறனுடன் தொடங்கும். இதற்கிடையில் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகளை அம்மாநில அரசு ஏற்கனவே தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!
மேலும் பள்ளிகளில் கேண்டீனைத் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு இருக்கும். இந்த உத்தரவு செப்டம்பர் 20 முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 200 விருந்தினர்கள் திருமணங்கள் மற்றும் திருமணம் தொடர்பான பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் முழு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறையைப் பராமரித்தல், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினியை பயன்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு – அரசுக்கு கோரிக்கை!
காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை சினிமா அரங்குகள் மற்றும் மல்டிப்ளெக்ஸ் 100 சதவிகித திறனுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது, அதே சமயம் யோகா மையங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம். மாவட்ட கலெக்டரின் முன் அனுமதியுடன் செப்டம்பர் 20 முதல் விலங்கு கண்காட்சிகள் அனுமதிக்கப்படும். செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் நீச்சல் குளங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.