ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது?? மாநில அரசு அறிவிப்பு!!
தெலுங்கானா மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக சென்ற கல்வியாண்டு இறுதியில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் நாடு முழுவதும் மூடப்பட்டன. இதனால் கடந்த கல்வியாண்டின் இறுதி தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே மாநில அரசுகள் அதற்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு!!
இந்நிலையில் நடப்பு கல்வியாண்டின் பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் டிசம்பர் முதல் வாரத்திலிருந்து 120 நாட்கள் பள்ளிகளை திறக்கலாம் என்று அறிவித்தது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா நோய்ப்பரவல் அதிகரித்துள்ள இந்த நிலையில் பள்ளிகளை திறப்பது ஆபத்தில் முடிவடையலாம். இதனால் பள்ளிகள் பொங்கலுக்கு பிறகு திறக்கலாம் என்று அரசு முடிவெடுத்துள்ளது.
ஆனால் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில அரசு மாணவர்கள் நலன் கருதி அறிவித்துள்ளது. ஆனால் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான மாணவர்கள் மற்றும் மாநில ஜூனியர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் பள்ளி, கல்லூரிகள் ஜனவரியில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்தாகுமா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
ஒன்பதாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து தெலுங்கானா கல்வித்துறை அம்மாநில அரசுக்கு திட்டம் அனுப்பி உள்ளது. இது தொடர்பான முடிவை தெலுங்கானா அரசு விரைவில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.