விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 20 அன்று துவக்கம்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மாநிலம் முழுவதும் தற்போது நிலவும் வெப்ப உயர்வு சூழலுக்கு மத்தியில் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 26 வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில தனியார் பள்ளிகள் வரும் ஜூன் 20 முதல் நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது நிலவிக்கொண்டிருக்கும் வெப்பஅலை சூழலை கவனத்தில் கொண்டு பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை கூடுதலாக அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் கொல்கத்தா நகரத்தில் பல பள்ளிகளை நடத்தி வரும் சர்ச் ஆஃப் நார்த் இந்தியா (CNI) கல்வி குழுமம் தற்போதுள்ள வானிலை முன்னேற்றம் காரணமாக கோடை விடுமுறையை குறைத்து ஜூன் 20 முதல் பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை தொடங்குமாறு கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இது குறித்து கொல்கத்தா பிஷப் பரிதோஷ் கேனிங் தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், ஜூன் 20 திங்கள்கிழமை முதல் பள்ளி வளாகங்களை மீண்டும் திறக்கவும், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளைத் தொடங்கவும் உத்தரவிட்டுள்ளார். அதாவது, ‘மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது நிலவும் வானிலை முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகள் அனைத்தும் 20 ஜூன் முதல் மீண்டும் திறக்கப்பட வேண்டும். மேலும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரில் வகுப்புகளை தொடங்க வேண்டும்’ என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – 40 ரயில்கள் ரத்து! பொதுமக்கள் அவதி!
இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் நிலவிய கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக கோடை விடுமுறையை ஜூன் 15 முதல் ஜூன் 26 வரை நீட்டித்து மாநில அரசு அறிவிப்புகளை வெளியிட்டது. இதற்கு பிறகு, மாணவர்களின் நேரடி கல்வி மீண்டும் பாதிக்கப்படும் என்று கருதிய சில தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த முடிவு செய்தது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழிக்கல்வி நடத்தப்பட்டு வந்த நிலையில், வரும் ஜூன் 20ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை துவங்க தனியார் பள்ளி நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளது.