தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 1 அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. கடந்த மாதத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் செப்-1ம் தேதி முதல் 9 – 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 1,700 க்கு கீழ் என்று வெகுவாக குறைந்து வருவதால் அடுத்தகட்ட நடவடிக்கையாக தொடக்கப் பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கான பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்றது. நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இது தொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
அக்.20ம் தேதி வரை பள்ளியை மூட உத்தரவு – 60 மாணவர்களுக்கு கொரோனா எதிரொலி!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பான அறிக்கை தயார் செய்து முதலமைச்சர் அவர்களிடம் சமர்பித்துள்ளோம். அதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 1 தேதி தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் மத்திய அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை முறையே பின்பற்றுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: இன்று செப்-30 பெட்ரோல், டீசல் விலை உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
மேலும் பள்ளிகள் திறப்பதற்குள் பள்ளி வளாகங்களை சுத்தமாக வைத்திருக்கும் படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் செய்தியை கேட்டு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள். இதற்கிடையில் முதற்கட்டமாக 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறந்த பின்னர், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளி நிர்வாகங்கள் கோரிக்கை வைத்துள்ளன.