தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வரும் நிலையில் இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
கடந்த ஏப்ரல் மாதம் உருவான கொரோனா 2 ஆம் அலை தொற்று தமிழகம் முழுவதும் இப்போது வீழ்ச்சியடைந்து வந்து கொண்டிருக்கும் சூழலில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 9 லிருந்து 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
SBI வங்கி வேலைவாய்ப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – வெடித்த சர்ச்சை! எம்பி கடிதம்!
இருந்தாலும் ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கிடையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக பல கட்டமாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதற்குரிய அறிக்கை முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளை திறப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் இலவச வேட்டி, சேலைகள் – புதிய சிக்கல்!
இந்நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பெற்றோர்கள் மத்தியில் தற்போது வரை கொரோனா குறித்த அச்சம் இருந்து வருவதால் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.