தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை உத்தரவு!!
சட்டசபை தேர்தல் காரணமாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி 6 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் நேரடி வகுப்புகள் துவங்கவுள்ளன.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மே மாதம் 3 ஆம் தேதி துவங்கி 23ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. பொதுத்தேர்வுக்கு முன்னதாக ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் செய்முறைத்தேர்வுகள் துவங்கவுள்ளன. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (06-04-2021) நடைபெற்றது.
பள்ளி மற்றும் கல்லூரிகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்டன. இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த முடியாத சூழல் உருவானது. அதனால் கடந்த 5 நாட்களாக மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை முதல் மீண்டுமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்கும் விதமாக இவ்விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
அதற்காக வாக்குச்சாவடிகளாக செயல்பட்ட பள்ளிகளில் சுகாதார பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி ஒவ்வொரு பள்ளிகளின் வகுப்பறைகள், கழிவறைகள், இருக்கைகள், கைப்பிடிகள் போன்றவற்றை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணிகள் இன்று (07-04-2021) நடைபெறுகிறது. அதன்படி ஒவ்வொரு பள்ளிகளையும் சுத்தப்படுத்தும் பணிகளை முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்