மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் ராஜஸ்தான் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள கனமழை எச்சரிக்கையால் ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா பள்ளி விடுமுறை குறித்து புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் இடைவிடாத மழையால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் கனமழை பெய்யவும் அதிக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஜோத்பூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளது. இந்த எச்சரிக்கையின் எதிரொலியாக, மாணவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து ஜோத்பூரில் உள்ள பள்ளிகளை மூட உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா பிறப்பித்த உத்தரவின் படி, கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த மழையால் தற்போது வெள்ளம் போன்ற சூழ்நிலையை ராஜஸ்தான் மாநிலம் சந்தித்து வருகிறது. மேலும், இடைவிடாத தொடர் மழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றும், மின்சாரம் துண்டிக்கப்பட்டும் மக்களது இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த 48 மணி நேரத்திற்குள் மழையின் பதிவு 225 மிமீ ஐ எட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மீண்டும் அதிவிரைவில் பரவும் கொரோனா – ஒரே நாளில் 20,557 பாதிப்பு
இவ்வாறு தொடர் மழை காரணத்தால் ஜோத்பூர் மாவட்ட அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளையும் (ஜூலை 28) இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து இரண்டு ரயில்களின் சேவையும் மேற்கு ரயில்வேயால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜோத்பூர் தவிர ராஜஸ்தானின் பிற பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.அதாவது பில்வாராவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 205 மிமீ மழையும், சித்தூர்கர் மாவட்டத்தில் 179 மிமீ மற்றும் ஜோத்பூரில் 111 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.