அதிகரிக்கும் ஃப்ளூ காய்ச்சல் – பள்ளி விடுமுறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்!

0
அதிகரிக்கும் ஃப்ளூ காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்!
அதிகரிக்கும் ஃப்ளூ காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்!
அதிகரிக்கும் ஃப்ளூ காய்ச்சல் – பள்ளி விடுமுறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து ஃப்ளூ காய்ச்சல் வேகமாக பரவி கொண்டிருக்கிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.

பள்ளி விடுமுறை

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் முறையாக நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து தற்போது 2022-2023ம் ஆண்டிற்க்கான நேரடி வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஃப்ளூ வகை வைரஸ் காய்ச்சலானது வேகமாக பரவி வருகிறது. மேலும் நடப்பு ஆண்டில் பள்ளி குழந்தைகளுக்கிடையே காய்ச்சலானது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. அதனால் பள்ளிகளில் குழந்தைகள் வருகை சற்று குறைந்து கொண்டே வருகிறது.

மேலும் தமிழகத்தில் influenza காய்ச்சலால் 1000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டுகின்றனர். அதன் காரணமாக காய்ச்சலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் காய்ச்சல் பரவலை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு!

Exams Daily Mobile App Download

அத்துடன் தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த காய்ச்சல் 3 நாட்களுக்குள் சரியாகி விடும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தேவையில்லை எனவும் கூறியுள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதால் மாணவர்களுக்கிடையே கற்றல் பாதிப்பு தான் ஏற்படும். இதையடுத்து பள்ளி மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து 14417 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!