ஜனவரி 11 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா பரவல் காரணமாக 9 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் வரும் ஜனவரி 11ம் தேதி முதல் அவை மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு:
குஜராத் மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா வெளியிட்டு உள்ள அறிவிப்பில், குஜராத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஜனவரி 11 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கும். அதே நேரத்தில் இளநிலை மற்றும் முதுகலை கல்லூரிகளைச் சேர்ந்த இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு எதிரொலி – 52 ஆசிரியர்கள் & 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!!
மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள, கொரோனா தொற்றுநோய் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பெற்றோரின் ஒப்புதல் ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு வருகை கட்டாயமாக இருக்காது என தெரிவித்த அமைச்சர், நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்கள் ஆன்லைன் கல்வியை தொடரலாம் எனவும் அறிவித்து உள்ளார்.
பிப்ரவரி 25ஆம் தேதி “தேசிய பசு அறிவியல் தேர்வு” – மத்திய அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து இன்று 2வது நாளாக கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதில் பெற்றோர்கள் தாமதமின்றி பள்ளிகளை திறக்குமாறு கோரி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்