1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 15 முதல் பள்ளிகள் திறப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில், பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து மாணவர்களும், பெற்றோர்களும் காத்திருந்தனர். அதனை பூர்த்தி செய்யும் நோக்கில் கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் ட்விட்டரில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பு குறித்த முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கோடை விடுமுறை பல மாநிலங்களில் முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதியை மாநில அரசுகள் படிப்படியாக வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று( ஜூன் 13) முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர். ஏனென்றால் கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி மாணவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் ட்விட்டரில் கூறியது, மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை பராமரிப்பதற்காகவும், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் நோக்கத்திலும் பள்ளிகள் ஏப்ரல் மாதம் முன்னதாக மூடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் பள்ளிகளை ஜூன் 13 ல் திறக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வந்ததன் அடிப்படையில் அந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் தற்போது நாளை மறுநாள் ஜூன் 15ம் தேதி முதல் மாநிலத்தில் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டிற்காக மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு!
மேலும் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு பல முன்னேற்பாடுகளை மாணவர்களின் நலனுக்காக மேற்கொண்டு வருகிறது. பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டு, வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. ஆனால் பள்ளிகளில் குழந்தைகள் விதிகளைப் பின்பற்றுகிறார்களா இல்லை என்பதை கண்காணிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இதனால் ஆசிரியர் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு மாணவர்களை வரவேற்கத் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.