தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு கிடையாது – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர் நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகளை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது என தகவல் பரவி வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 1 அன்று முதல் கட்டமாக 9 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக தொடக்க மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களின் கல்வி நிலை கருதி பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனடிப்படையில் பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் பெறப்பட்டு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழக ஊழியர்களுக்கு நிரந்தர பணி மற்றும் இலவச பஸ்பாஸ் – அமைச்சர் தகவல்!
இதனை ஆய்வு செய்து முதல்வர் நவம்பர் 1 முதல் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வெகு நாட்களுக்கு மீண்டும் பள்ளிக்கு வருவதால் அவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை தூண்டி மன சோர்வை போக்கும் வகையில் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளை ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடங்க சிறந்த வங்கி எது? முழு விபரங்கள் இதோ!
இந்த நிலையில் 1 – 8 வகுப்புகளை தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர் நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியானது. இது குறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நர்சரி பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. முதல்வருடன் நடந்த ஆலோசனையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது பற்றிதான் விவாதித்தோம் என்று தெரிவித்தார். நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.