தமிழகத்தில் ஜூன் 13 முதல் 1 – 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – 30 நாட்கள் கோடை விடுமுறை!

0
தமிழகத்தில் ஜூன் 13 முதல் 1 - 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - 30 நாட்கள் கோடை விடுமுறை!
தமிழகத்தில் ஜூன் 13 முதல் 1 - 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - 30 நாட்கள் கோடை விடுமுறை!
தமிழகத்தில் ஜூன் 13 முதல் 1 – 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – 30 நாட்கள் கோடை விடுமுறை!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கி இந்த மாதம் 28-ஆம் தேதி வரை அக்னி இருக்கும் என்றும், இயல்பை விட வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக ஓய்ந்து வருவதால், கடந்த பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இந்த தேர்வை மொத்தம் 8.37 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். அதன்படி, நேற்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி உள்ளன. இதையடுத்து இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி உள்ளன. இந்த தேர்வில் இன்று 9 லட்சத்து 55 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும் ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை, 11 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 24 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு வரும் மே 14 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத அளவுக்கு கடும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 1 லட்ச பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், பொதுமக்கள் பகலில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதற்கிடையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதாகவும், பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடுவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!