தொடரும் கனமழை – வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்… பள்ளிகளுக்கு விடுமுறை!
பெய்து வரும் கனமழையால் உத்திரப்பிரதேசத்தில் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் இடைவிடாது பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இரவு பகலாக பெய்து வரும் இந்த கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சாலைகள் எங்கும் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது .
மேலும் அம்மாநிலத்தின் சில இடங்களில் விழுந்த இடியின் காரணமாக 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அம்மாநிலத்தில் உள்ள லக்னோவில் உள்ள வில்குஷா எனும் பகுதியில் உள்ள ராணுவ வளாகத்தின் பாதுகாப்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்தனர். இவ்வாறு தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக உத்தரப்பிரதேசம் மற்றும் குர்கானின் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உலகம் முழுவதும் 6,535,980 பேரை காவு வாங்கிய கொரோனா – வெளியான அதிர்ச்சி தகவல்!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து குர்கானில் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்திரபிரதேசத்தை தொடர்ந்து டெல்லியிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அங்கு காசியாபாத், இந்திராபுரம், நொய்டா, தாத்ரி, குருகிராம், ஃபரிதாபாத், ஆல்வார் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் இரவு வரை பெய்த தொடர் மழையால் டெல்லி நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்