ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி உத்தரவு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இலங்கை அரசு மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் கடுமையான இழப்பை அடைந்த நாடுகளுக்கு மத்தியில் இன்று வரை படு மோசமான நிலையில் இலங்கை நாடு இருந்து வருகிறது. அதுவும் நடப்பு ஆண்டில் பெரிய அளவில் வருவாய் காணாத இந்த அண்டை நாடு தரைமட்டமான பொருளாதார நெருக்கடியால் சீர்கெட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து விநியோகமாகும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!
இதனால் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த நீண்ட நாட்கள் போராட்டத்தின் விளைவாக அந்நாட்டு பிரதமர் அதாவது அதிபர் கோத்தபய ராஜபக்சே சகோதரர் ஆகிய மகிந்த ராஜபக்சே அவரது பதவியை ராஜினாமா செய்தார். அதனால் புதிய பிரதமராக, ரணில் விக்ரமசிங்கே அவர்களும் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் இலங்கையில் வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்பின் படி இன்று முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த மாதம் ஜூலை 10 ஆம் தேதி வரை நகர்ப்புற கல்வி நிலையங்கள் மற்றும் நடைமுறையில் இருக்கும் பல சேவைகள் முடக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஜூலை 10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.