6 முதல் 8ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று முதல் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளனர். இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வருகை புரிந்து வருகின்றனர்.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா 2வது அலையால் தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவாகி வந்தது. இதனை தடுக்கும் நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலபடுத்தப்படாமல், மாநில அரசுகள் கொரோனா தொற்று நிலவரத்துக்கு ஏற்ப பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் படி மத்திய அரசு அறிவுறுத்தியது. எனவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகின. ஊரடங்கு கட்டுப்பாடுகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்ட்டது. இருப்பினும் அரசின் துரித நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசிகள் பயன்கள் ஆகியவற்றின் காரணமாக கொரோனா வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 சரிவு – இன்றைய நிலவரம்!
இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து உள்ளது. எனவே அடுத்தகட்ட நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களை திறக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக உயர்நிலை பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டது. தமிழகத்தில் செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஜஸ்தான் மாநில அரசு ஏற்கனவே அறிவித்தபடி இன்று 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறந்து உள்ளது. இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் நேரடி வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர்.
திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி – தேவஸ்தானம் அறிவிப்பு!
பள்ளிகளில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் 18 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 40 சதவீத மாணவர்கள் மட்டுமே நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.